பிரதான செய்திகள்

உலக சுற்றாடல் தினத்தில் ஒலுவில் அல் மதீனாவில் மர நடுகை


உலக சுற்றாடல் தினம் மற்றும் தேசிய சுற்றாடல் வாரத்தினையொட்டி சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடுகை விழா (05) ஒலுவில் அல்மதீனா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.


பாடசாலையின் அதிபர் கே.எல்.அமீர் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம்.ஜஃபர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தார்.


இதன்போது சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் பொதுச் செயலாளர் எஸ்.அஷ்ரப்கான், பிரதித் தலைவர் ஏ.எல்.எம்.ரபீக் பிர்தௌஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இவ் விழா நிகழ்வின் போது அட்டாளைச்சேனை கோட்ட மட்ட தமிழ்த்தினப் போட்டியில் கும்மி நடனத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற எம்.எஸ்.சாரா அதீமா, ஏ.பி(B). சைனப் மிஸ்பா, ஏ.எம்.ரிம்ஸா, எம்.எஸ். ஆயிஷா எம்.ரி.அக்ஸா, எப்.ஹப்ஸா மர்யம் மற்றும் 'இசையும் அசையும்' நிகழ்ச்சியில் இரண்டாமிடம் பெற்ற எம்.எப்.இல்மா மரியம் ஆகிய மாணவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment