பிரதான செய்திகள்

சபிரி கமக் கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஏறாவூரில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள்

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சபிரி கமக் கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஏறாவூர் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த வேலைத்திட்டத்தின் ஊடாக, ஏறாவூர் வாழியப்பா தைக்கா வீதி, மீராகேணி மஸ்த்தார் வீதி, AKM வீதி, மீராகேணி அணைக்கட்டு ஆகியன முதற்கட்டமாக, அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

குறித்த அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (27) முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

 இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், ஏறாவூர் நகர சபை தவிசாளர் ஐ.ஏ.வாசித் அலி, ஏறாவூர் பிரதேச செயலாளர் அல் அமீன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஏ.எம்.மாஹிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment