பிரதான செய்திகள்

பொது இடங்களில் கட்டாக்காளி மாடுகளின் நடமாட்டம் அதிகரிப்பு: மக்கள் விசனம்

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்துக்கு முன்பாக கட்டாக்காளி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதனால் குறித்த செயலகத்திற்கு அன்றாடம் வருகைதரும் பொதுமக்களும், ஊழியர்களும் பல்வேறு அசௌகரிகங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

ஏறாவூர் பிரதேசத்தின் பிரதான வீதிகள், பொதுச் சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களிலும் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொது மக்களுக்கு பாரிய இடையூறுகள் ஏற்படுவதுடன் பல்வேறு விபத்துகளும் நிகழ்கின்றன.

இவற்றைக் கருத்தில் கொண்டு கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு ஏறாவூர் நகர சபை விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து கால்நடை உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பொது இடங்களில் கால்நடைகளின் நடமாட்டமானது பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதனால், இதனை அவற்றின் உரிமையாளர்கள் உணர்ந்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment