பிரதான செய்திகள்

அஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து

(அஸ்லம் எஸ்.மௌலானா, யூ.கே.காலிதீன்)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று (22) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் திடீரெனெ ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக ஒரு தொகை மருந்துப் பொருட்களும் மருத்துவ உபகரணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு மற்றும் நிர்வாகப் பிரிவு அமைந்துள்ள பிரதான கட்டிடக் தொகுதியின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள இரசாயன களஞ்சியசாலை பகுதியிலேயே தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து மேற்கொண்ட துரித நடவடிக்கையினால் தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இதன்போது கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், மாநகர சபை உறுப்பினர் அப்துல் மனாப் உள்ளிட்டோரும் ஸ்தலத்திற்கு விரைந்து தீயணைப்பு நடவடிக்கைகளை நெறிப்படுத்தியிருந்தனர்.

தீயணைப்பு நடவடிக்கைகளில் வைத்தியசாலை ஊழியர்களும் பொது மக்களும் பங்களிப்பு வழங்கியிருந்தனர்.

இத்தீபரவலுக்கான காரணம் தெரியவில்லை. சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment