பிரதான செய்திகள்

பிரதமர் தோல்வியடைந்தாலும் பாராளுமன்றம் கலையாது: காலநிதி ஜயம்பதி விக்ரமரட்ண MP

ஒன்றினைந்த எதிர்க்கட்சி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் தோல்வியுற்றாலும்,  பாராளுமன்றம் கலையாது என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண தெரிவித்தார்.

அரசியலமைப்பின் படி ஜனாதிபதி பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையுள்ள கட்சித் தலைவரையே, அரசாங்கத்தை அமைக்கும்படி அழைப்பு விடுப்பார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் பிர­தமர் தோல்­வி­யுற்றால்  அடுத்து என்ன நடை­பெ­று­மென்று கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கருத்து தெரி­விக்கும் போது, 

அரசியலமைப்பின்படி அரசாங்கம் பதவிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகும்வரை ஜனாதிபதியால் கூட அரசாங்கத்தை கலைக்க முடியாது. அவ்­வாறு பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட வேண்டுமானால்  பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம்  வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment