அரசியலமைப்பின் படி ஜனாதிபதி பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையுள்ள கட்சித் தலைவரையே, அரசாங்கத்தை அமைக்கும்படி அழைப்பு விடுப்பார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமர் தோல்வியுற்றால் அடுத்து என்ன நடைபெறுமென்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது,
அரசியலமைப்பின்படி அரசாங்கம் பதவிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகும்வரை ஜனாதிபதியால் கூட அரசாங்கத்தை கலைக்க முடியாது. அவ்வாறு பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment