பிரதான செய்திகள்

புணானை காட்டுப் பகுதியில் வைத்து சொகுசு பஸ் தீ வைத்து எரிப்பு

கொழும்பு, மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவின் புணானை காட்டுப்  பகுதியில் வைத்து பஸ் ஒன்றுக்கு தீ வைத்து எரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் (16) இரவு 9.30 மணியளவில், புணானை பொலிஸ் சாவடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ள காட்டுப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலொன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி சென்றுகொண்டிருந்த குறித்த பஸ்​ஸை, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து வந்த நால்வர், பஸ்ஸைத் தீயிட்டுக் கொளுத்தி தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஸ் தீவைக்கப்பட்ட பொழுது பஸ்ஸிலிருந்து சாரதியும் அதன் உரிமையாளருமான மாதங்கொட்ட, மன்னம்பிட்டியைச் சேர்ந்த, 30 வயதுடைய எச்.ஏ. சோமசிறி சாமர புஸ்பகுமார மற்றும் அவரது உதவியாளரும் நடத்துநருமான வாழைச்சேனையைச் சேர்ந்த, 25 வயதுடைய எம். முஹம்மத் ஆகியோர் சிறிய காயங்களுடன் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment