நேற்றைய தினம் (16) இரவு 9.30 மணியளவில், புணானை பொலிஸ் சாவடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ள காட்டுப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலொன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி சென்றுகொண்டிருந்த குறித்த பஸ்ஸை, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து வந்த நால்வர், பஸ்ஸைத் தீயிட்டுக் கொளுத்தி தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஸ் தீவைக்கப்பட்ட பொழுது பஸ்ஸிலிருந்து சாரதியும் அதன் உரிமையாளருமான மாதங்கொட்ட, மன்னம்பிட்டியைச் சேர்ந்த, 30 வயதுடைய எச்.ஏ. சோமசிறி சாமர புஸ்பகுமார மற்றும் அவரது உதவியாளரும் நடத்துநருமான வாழைச்சேனையைச் சேர்ந்த, 25 வயதுடைய எம். முஹம்மத் ஆகியோர் சிறிய காயங்களுடன் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:
Post a Comment