பிரதான செய்திகள்

வடக்கின் ஆளுநராக மீண்டும் ரெஜிநோல்ட் குரே நியமனம்

வடமாகாணத்தின் ஆளுநராக மீண்டும் ரெஜிநோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (12) வியாழக்கிழமை புதிதாக நியமிக்கப்பட்ட 7 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இதில் வடக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றிய ரெஜிநோல்ட் குரே நேற்றையதினம் மத்திய மாகாண ஆளுநராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் வடமாகாண ஆளுநராக இன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஊவா மாகாண ஆளுநராக நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பி.பீ.திசாநாயக்க, மத்திய மாகாண ஆளுநராகவும் ஊவா மாகாண பதில் ஆளுநராகவும் இன்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ஆளுநர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு

1. ஹேமகுமார நாணயக்கார - மேல் மாகாணம்

2. கே.சி.லோகேஸ்வரன்  - வடமேல் மாகாணம்

3. திருமதி. நிலுக்கா ஏக்கநாயக்க - சப்ரகமுவ மாகாணம்

4. ரெஜினோல்ட் குரே - மத்திய மாகாணம் ( மீண்டும் இன்றைய தினம் வடமாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்)

5. மார்ஷல் பெரேரா  - தென் மாகாணம்

6. எம்.பி.ஜயசிங்க  - வடமத்திய மாகாணம்

7. பி.பீ.திசாநாயக்க  - ஊவா மாகாணம்

ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் இப்பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment