பிரதான செய்திகள்

கல்முனை மாநகர சபை கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாண பத்திரம் கையளிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஏழு உறுப்பினர்களும் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலியிடம் தமது சத்தியப்பிரமாண பத்திரத்தை கையளித்துள்ளனர்.

இந்நிகழ்வு இன்று புதன்கிழமை (28) கல்முனை மாநகர சபை செயலகத்தில் நடைபெற்றது.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரனுடன் கே.விஜயரட்ணம், பொன் செல்வநாயகம், கே.சிவலிங்கம், என்,இராஜரட்ணம், எஸ்.குபேரன், கே.மகேந்திரன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தமது சத்தியப்பிரமாண பத்திரத்தை கையளித்தனர்.

இதன்போது எதிர்வரும் ஏப்ரல் 02 ஆம் திகதி இடம்பெறவுள்ள கல்முனை மாநகர சபையின் முதலாவது அமர்வு நடைமுறை உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆணையாளர் லியாகத் அலியுடன் இவர்கள் கலந்துரையாடினர்.

இதனைத் தொடர்ந்து மாநகர சபையின் மாதாந்த கூட்டம் நடைபெறுகின்ற சபா மண்டபத்தையும் இவர்கள் பார்வையிட்டனர்.

அதேவேளை கல்முனை மாநகர சபையின் ஆட்சியமைப்பு விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரனிடம் இங்கு வைத்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது; இது தொடர்பில் தாங்கள் தீர்க்கமான முடிவொன்றை எடுத்திருப்பதாகவும் அதனை இப்போது வெளியிட முடியாது எனவும் தெரிவித்தார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment