பிரதான செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்து, சுதந்­திரக் கட்சி தனது கழுத்தை அறுத்­துக்­கொள்­ளக்­ கூ­டாது

நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­கவே முன்­வைக்­கப்­பட்­ டுள்­ளது. இந்­நி­லையில், இதனை சுதந்­திரக் கட்சி ஆத­ரிக்­கு­மாயின் அது நகைச்­சு­வை­யான செயற்­பா­டாகும். தனது கழுத்தை தானே அறுத்­துக்­கொள்ளும் செயற்­பா­டா கும். ஆகவே, சுதந்­திரக் கட்­சி­யினர் உறு­தி­யான தீர்­மானத்­திற்கு வர வேண்டும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹிரு­ணிகா பிரே­ம­சந்­திர தெரி­வித்தார்.

பிட்­ட­கோட்­டேயில் அமைந்­துள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று (30) நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தகுந்த விட­ய­மல்ல. ஆகவே, நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு எதி­ராக வாக்­க­ளிக்க வேண்டும் என சுதந்­திரக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் கூறி­யுள்ளார். இதன்­படி கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரின் நிலைப்­பாடே உறு­தி­யா­னது.

இதன்­படி கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் வேறொரு நிலைப்­பாட்­டையும் கட்­சியின் தலைவர் என்­ற­வ­கையில் ஜனா­தி­பதி வேறு நிலைப்­பாட்­டையும் வகிக்க முடி­யாது. ஜனா­தி­ப­தியின் நிலைப்­பாடு பொதுச்­செ­ய­லாளர் மூல­மா­கவே வெளி­யாகும். ஏனையோர் எத­னையும் கூறலாம். அது அவர்­க­ளது தனிப்­பட்ட கருத்­து­க­ளாகும். சுதந்­திரக் கட்­சியில் உள்ள கருத்து வேறு­பா­டு­களை கட்­சிக்­குள்ளே தீர்க்க வேண்டும். ஜனா­தி­பதி அனை­வ­ரையும் அழைத்து கட்­சி­யி­னரின் நிலைப்­பாட்டை பெற வேண்டும்.

தெஹி­வளை, கல்­கிஸை மாந­கர சபை­யிலும் நாம் தோல்வி அடை­வ­தற்கும் சுதந்­திரக் கட்­சி­யி­னரே பிர­தான கார­ண­மாகும். ஆரம்­பத்தில் எமக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிப்­ப­தாக உறு­தி­ய­ளித்­தனர். அதன்­பின்னர் பொது­ஜன முன்­ன­ணிக்கு வாக்­க­ளித்­தனர். ஆகவே, சுதந்­தி­ரக்­கட்­சியில் மஹிந்த அம­ர­வீர ஒரு கருத்­தையும் துமிந்த திஸா­நா­யக்க இன்­னு­மொரு கருத்­தையும் முன்­வைக்­கின்­றனர்.

ஆகவே ஒரு நிலைப்­பாட்­டுக்கு சுதந்­திரக் கட்­சி­யினர் வர வேண்டும். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தீர்­மா­னத்­திற்கு நாம் கட்­டுப்­பட்டு ஒரு தீர்­மா­னத்­திற்கு வரு­கின்றோம். எனினும் சுதந்­திரக் கட்­சிக்குள் அவ்­வாறு தலை­வ­ருக்கு கட்­டுப்­ப­டு­வ­தா­கவோ அல்­லது ஒரு தீர்­மா­னத்தை எடுப்­ப­வர்­க­ளாக இல்லை. சுதந்திரக் கட்சியில் உறுதியான நிலைப்பாடு இல்லை.

இது அரசாங்கத்திற்கு எதிராக முன் வைக்கப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையாகும். இந்நிலையில் இதனை தோற்கடிப்பது நகைச்சுவையான செயற் பாடாகும். தமது கழுத்தை தானே அறுத்துக் கொள்ளும் செயற்பாடாகும் என்றார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment