பிரதான செய்திகள்

சட்டவிரோதமாக கைக்குண்டு மற்றும் துப்பாக்கி வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

(எப்.முபாரக்)    

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கியொன்றினையும் தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று (3) உத்தரவிட்டார்.                             

திருகோணமலை, மிகுந்துபுர பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.                       

குறித்த சந்தேக நபர் நீண்ட காலமாக வேட்டையாடி வருவதாகவும், ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் திருகோணமலை தலைமையக குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரின் வீட்டினை சோதனை மேற்கொண்ட போது சட்டவிரோதமான முறையில் கைக்குண்டு ஒன்றினையும், துப்பாக்கியொன்றினையும் வைத்திருந்த நிலையில் கைப்பற்றியதோடு,சந்தேக நபரையும் வெள்ளிக்கிழமை (2) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.     

சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment