பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம் எதிர்வரும் 9ஆம் திகதி வர்த்தமானியில்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மூலம், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் 9 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது.

இதற்கமைவாக இந்தப் பெயர் பட்டியல் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்துவதற்காக பட்டியல் மூலம் அந்தந்த கட்சிக்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கணக்கிடப்பட்டு, தற்போது மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர், அரசியல் கட்சிகள், தெரிவு செய்யும் உறுப்பினர்களின் பெயர் பட்டியல், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு வழங்குவதற்கான இறுதிநாள் நேற்று என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக, இந்தத் கால எல்லை எதிர்வரும் புதன்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, பெயர் பட்டியலை வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தும் பணி எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அத்துடன் இந்தத் தினம் மேலும் நீடிக்கப்படாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய மேலும் தெரிவத்தார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment