பிரதான செய்திகள்

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு அம்பாறை மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியது

முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, இன்று (11) திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்திலுள்ள பல உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடும் பொருட்டு, கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

மேற்படி ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு மயில் சின்னத்தில் போட்டியிடுவதால், அச்சின்னத்துக்குரிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் எஸ். சுபைர்தீன், இன்று காலை அம்பாறை மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தினார்.

அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, பொத்துவில் பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை, கல்முனை மாநகர சபை, சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபை ஆகியவற்றில் போட்டியிடும் பொருட்டு ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், பசீர் சேகுதாவூத், எம்.ரி. ஹசனலி தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்பும் அங்கம் வகிக்கின்றன.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment