களனி, திப்பிடிகொட பகுதியிலுள்ள பொலித்தின் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (17) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பேலியகொடை பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பிரதேச மக்களுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
எது எவ்வாறு இருப்பினும், இதனால் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதோடு, பொருட் சேதங்கள் குறித்து இதுவரை கணக்கிடப்படவில்லை.

0 comments:
Post a Comment