நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், முஸ்லிம் காங்கிரஸ் தனித்து நின்று போட்டியிடுவது பற்றித் தீர்மானிக்கும் கூட்டம் ஒன்று நாளை (30) நடைபெறவுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, தேசிய முன்னணியில் ஐ.தே.க.வுடன் இணைந்தே மு.கா. போட்டியிலும் என்று தெரியவருகிறது. என்றபோதிலும், வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தேர்தலில் கூட்டணி சார்பாக இறங்குவதா அல்லது தனித்து இறங்குவதா என்பதையே நாளை தீர்மானிக்கவுள்ளதாகத் தெரிகிறது.
இந்தக் கூட்டம் பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில், ஐ.தே.க. பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் தலைமையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment