பிரதான செய்திகள்

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 8 லட்சத்து எண்பதாயிரம் ரூபாவுக்கு அதிகம் பெறுமதியுடைய 88 சிகரெட் பக்கற்றுக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குறித்த இருவரும் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

குவைத் நாட்டில் இருந்து வந்த இவர்களின் பயணப் பையில் இருந்து இந்த சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜெயரத்ன குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, கைப்பற்றப்பட்ட சிகரட்டுகளை சுங்கப்பிரிவினர் கையகப்படுத்தியதுடன்,  குறித்த இருவருக்கும் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment