பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தனித்து போட்டியிட தீர்மானம்: பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம

தற்போது வரை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இந்திய விஜயத்தை நிறைவு செய்துவிட்டு நாடு திரும்பியதும் இது பற்றி தீர்மானிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

பதுளை - வியலுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, குமார வெல்கம மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

இதேவேளை, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைப் பாதுகாக்க எந்தவொரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாக, அக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment