பிரதான செய்திகள்

கைது செய்யப்பட்ட ஐ.தே.கட்சியின் உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை: ரணில் உத்தரவு

திவுலபிட்டிய பகுதியில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ரன்டீர் ரொட்ரிகோவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளுமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிமுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பிறப்பித்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவொன்று தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் திவுலப்பிட்டிய - கேன்பிடகெதர பகுதியில் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டையடுத்து மேல் மாகாண சபை உறுப்பினர் ரன்டீர் ரொட்ரிகோ உட்பட 07 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். 

இதனையடுத்து நேற்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட 07 சந்தேகநபர்களும் நவம்பர் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment