பிரதான செய்திகள்

சுதந்திரக் கட்சியின் அம்பாரை மாவட்ட பிரதம அமைப்பாளராக அன்வர்தீன் ஜனாதிபதியினால் நியமனம்

(அப்துல் ஹமீட்)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாரை மாவட்ட பிரதம அமைப்பாளராக ஏ.பீ.அன்வர்தீன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக்கடிதம் நேற்று (12) ஜனாதிபதி மாளிகையில்  வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில், முன்னாள் ஜனாபதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த. பைசர் முஸ்தபா மற்றும் ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

சுதந்திரக் கட்சியின் அம்பாரை மாவட்ட பிரதம அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அன்வர்தீன், சமூக சேவையில் மிக நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதோடு, அக்கரைப்பற்று பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறார்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment