பிரதான செய்திகள்

சைட்­டத்­திற்கு தீர்­வின்றேல் சாகும்­வரை உண்­ணா­வி­ரதப் போராட்டம்

அர­சாங்கம் சைட்டம் மருத்­துவக் கல்­லூ­ரிப்­பி­ரச்­சி­னைக்கு  தீர்வு வழங்­கு­வ­தாகக் கூறி முன்­னெ­டுக்கும் கேலிச் செயற்­பா­டு­களை உடன் நிறுத்தி விட்டு உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும்  என முன்­னிலை சோசலிச  கட்சி தெரி­வித்­துள்­ளது. 

 அப்­பொ­றுப்­பி­லி­ருந்து அர­சாங்கம் வில­கினால் நவம்பர் முதலாம் திகதி முதல் அனைத்து பல்­க­லைக்­க­ழக மருத்­துவ பீட மாண­வர்­களின் பெற்­றோர்  சாகும் வரை­யி­லான போராட்­டத்­தினை முன்­னெ­டுப்­பார்கள் எனவும் அக்­கட்சி   எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

முன்­னிலை சோச­லிசக் கட்­சியின் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று (25) புதன்­கி­ழமை மரு­தா­னையில் அமைந்­துள்ள சமய மற்றும் சமூக கேந்­திர நிலை­யத்தில் இடம்­பெற்­றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய அக்­கட்­சியின் அமைப்­பாளர் புபு­து­ஜ­ய­கொட மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், 

சைட்டம் மருத்­துவ கல்­லூரி தொடர்­பான பிரச்­சி­னைகள் கடந்த ஜன­வரி மாதம் முதல் பேசப்­பட்டு வரு­கின்­றன. எனினும் அர­சாங்கம் இது தொடர்பில் ஒரு தீர்க்கமான முடி­வினை கூறாமல் காலம் கடத்தி வரு­கின்­றது. 

இதன் காரண­மாக பல்­க­லைக்­க­ழ­கங்­களின் மருத்து பீட மாண­வர்கள் தொடர்ச்­சி­யான போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­மையால் அவர்­க­ளது கல்வி நட­வ­டிக்­கை­களும் பாதிக்­கப்­ப­டு­கின்­றன.  ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் மாத்­திரம் இவ்­வி­டயம் தொடர்பில் கலந்­து­ரை­யாடி தீர்­வினைத் தரு­வ­தாக கூறப்­பட்­டது.  

சைட்டம் செயற்­திட்டம் நிறுத்­தப்­பட்டு அதற்கு பதி­லாக வேறொரு நிறு­வனம் நிறுவப்படும் என்று எமக்கு தக­வல்கள் கிடைக்­கப்பெற்­றுள் ளன. அவ்வாறு வேறு ஒரு நிறு­வனம் நிறு­வப்­பட்டால் அது என்ன என்­பது பற்றி அர­சாங்கம் எமக்கு அறி­விக்க வேண்டும்.

எனினும் இப்­பி­ரச்­சி­னைக்கு மாற்று நிறு­வனம் நிறு­வு­வது மட்டும் தீர்­வாக அமை­யாது. சைட்டம் கல்­லூ­ரியை முற்­றாக நீக்க வேண்டும். அத்­தோடு  புதி­தாக மாண­வர்­களை இணைக்கும் செயற்­பாட்­டையும் நீக்க வேண்டும். தற்­போது அக்­கல்­லூ­ரியில் பயின்று வரும் மாண­வர்­களை என்ன செய்­வது என்­ப­தற்­கான தீர்­வி­னையே அர­சாங்கம் வழங்க வேண்டும். அதுவே இப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர தீர்­வாக அமையும்.

இப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுகள் பல­வற்­றையும் வைத்­திய சங்­கங்கள், பல்­க­லைக்­க­ழக மருத்­துவ பீட விரி­வு­ரை­யா­ளர்கள் சங்கம் போன்­றன முன்­வைத்து வரு­கின்ற போதிலும்  அர­சாங்கம் அவை தொடர்பில் கவ­னத்தில் கொள்­வ­தாகத் தெரி­ய­வில்லை. அரசதரப்பில் இருந்து எவ்­வி­த­மான தீர்வு நட­வ­டிக்­கை­களும் இது­வ­ரையில் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. 

இப் ­பி­ரச்­சி­னைக்கான தீர்வு தொடர்பில்  மருத்­துவ பீட பேரா­சி­ரி­யர்­க­ளுடன் இது­வ­ரை­யிலும் கலந்­தா­லோ­சிக்­கப்­ப­ட­வில்லை.  ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகி­யோரே பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொள்­கின்­றனர். ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­படும் மாண­வர்­களை இது­வ­ரை­யிலும் பேச்­சு­வார்த்­தைக்கு அழைக்­க­வில்லை அரச மருத்­துவ சங்­கத்­தினர் மட்டும் ஒரு­முறை ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்­தையில் கலந்­து­கொண்­டனர். ஆயினும் அவர்­களின் பங்­க­ளிப்பு பய­னற்­ற­தாக அமைந்­தது.

இப்­பி­ரச்­சி­னைக்­கான  தீர்வை கடந்த இரு தினங்­க­ளுக்குள் வழங்­கு­வ­தாக ஜனா­தி­பதி குறிப்­பிட்டார். உயர்­கல்வி அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல கடந்த திங்­கட்­கி­ழமை தீர்­மா­னத்தை அறி­விப்­ப­தாக குறிப்­பிட்டார். ஆயினும் இது­வரை எவ்­வி­த­மான தீர்மானமும் அறிவிக்கப்படவில்லை. இவர்களின் வாக்குறுதிகள் பொய்யானதாகவே காணப்படுகின்றன.  

இப்பிரச்சினைக்குரிய தீர்வை அரசாங்கம் வழங்குவதில் தொடர்ந்தும் இழுத் தடிப்புக்களைச் செய்யுமாகவிருந்தால் நவம்பர் முதலாம் திகதி முதல் அனைத்து பல்கலைக்கழகங்களினதும் மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத் தினை முன்னெடுப்பார்கள் என்றார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment