பிரதான செய்திகள்

ஆர்ப்பாட்டத்தின் போது தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம்


உதவி பொலிஸ் அத்தியட்சகர் துஷார தலுவத்தவுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு கூறியுள்ளது. 

மாத்தறை பொலிஸ் பிரிவிற்கே அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

கடந்த வௌ்ளிக்கிழமை ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டத்தின் போது, நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக குறித்த பொலிஸ் அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டது. 

இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு கூறியுள்ளது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment