பிரதான செய்திகள்

குச்சவெளியில் கட்டுத்துவக்குடன் ஒருவர் கைது

(எப்.முபாரக்)

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குடா பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்டுத் துவக்கொன்றும் 45 வயதுடைய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் கட்டுத் துவக்கொன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் செவ்வாய்கிழமை (10) அவ்வீட்டினை சோதனைக்குட்படுத்திய போது கட்டுத்துவக்கும் வீட்டு உரிமையாளரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர் குச்சவெளி பொலிஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவரை திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை குச்சவெளி பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment