ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலியின் முயற்சியினால் நெடுஞ்சாலைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டினூடாக காபட் வீதியாக புனரமைக்கப்பட்ட சம்மாந்துறை அலவக்கரை வீதி எதிர்வரும் (13) வெள்ளிக்கிழமை பி.ப.5மணிக்கு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
ஹசன் அலியின் கோரிக்கைக்கமைய குறித்த வீதியினை காபட் வீதியாக புனரமைப்பதற்காக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல 25மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இதேவேளை அனடறைய தினம் சம்மாந்துறை MPCS வளாகத்தில் பொதுக்கூட்டமொன்றும் இடம்பெறவுள்ளது.

0 comments:
Post a Comment