அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தினால் (ACMYC) இலங்கையிலுள்ள மத்தரஸாக்களில் அல்-குர்ஆனை மனனம் செய்யும் ஹிப்ளு மாணவர்களுக்கு இலவசமாக அல்-குர்ஆன் பிரதிகள் வழங்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக மேற்படி அமைப்பினால் கடந்த வருடம் 40மத்ரஸாக்களில் உள்ள 1500 ஹிப்ழ் மாணவர்களுக்கு அல்-குர்ஆன் பிரதிகள் வழங்கப்பட்டன.
இரண்டாம் கட்டமாக இவ்வருடமும் ஹிப்ழ் மாணவர்களுக்கு 1000 அல்குர்ஆன் பிரதிகள் வழங்கப்பட்டன.
இரண்டாம் கட்டமாக அல்குர்ஆன் பிரதிகள் வழங்கும் நிகழ்வு ACMYC ஒன்றியத்தின் தலைவர் என்.எம் நஜாத் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது ஒன்றியத்தின் உயர்பீட உறுப்பினர்கள் இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள 30மத்தரஸாக்களுக்கு நேரடியாகச் சென்று குர்ஆன் பிரதிகளை வழங்கி வைத்தனர்.

0 comments:
Post a Comment