பிரதான செய்திகள்

32லட்சம் ரூபா செலுத்தி இறைச்சிக்கடையை கொள்வனவு செய்த பெளத்த பிக்கு

மத்துகம பிரதேச சபையினால் பொதுச் சந்தையில் நடத்திச் செல்லப்பட்ட இறைச்சிக் கடை ஒன்றை களுபஹன சேலதெலாராமய விகாரையின் விகாராதிபதி மாவிட்ட ஞானரத்ன தேரர் கேள்விப்பத்திரம் மூலம் கொள்வளவு செய்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மத்துகம பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளை மூடுவதற்கு பௌத்த பிக்குகள் ஒன்றிணைந்து தீர்மானம் எடுத்தோம்.

பிரதேச அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்ததுடன், நகர நிர்வாக சட்டத்திற்கமைய இது தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு அவர்களால் முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால், 2018ஆம் ஆண்டு கோள்விப் பத்திரத்தின் போது விண்ணப்பித்து, கடையை பெற்று மூடுவதற்கு தீர்மானித்ததாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த கடையை 3,225,622 ரூபா செலுத்தி பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கேள்விப்பத்திரம் மூலம் பெறப்பட்ட இறைச்சிக் கடை ஒன்றை மூடிவிட முடியாது என்று பிரதேச செயலாளர் கூறியதாகவும் மாவிட்ட ஞானரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment