பிரதான செய்திகள்

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வாகன விபத்து


கல்முனை ,மட்டக்களப்பு  பிரதானவீதியில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் மினிரக வாகனமானது ஒன்பது தூண்களையும், கடைச்சுவரையும் உடைத்துக்கொண்டு   கடைக்குள் நுழைந்துள்ளது  என களுவாஞ்சிகுடி  போக்குவரத்து பொலிஸ்  பொறுப்பதிகாரி ஆர்.எம் ரத்நாயக்க தெரிவித்தார்.

இச்சம்பவம் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நிகழ்ந்துள்ளது.

கல்முனை பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான மினிரக  டாட்டா லொறியானது கல்முனையில் இருந்து புறப்பட்டு கல்முனை-மட்டக்களப்பு நெடுஞ்சாலை வழியூடாக ஏறாவூரை நோக்கி பயணிக்கும் போது சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையின் காரணமாகவே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வாகனமானது வீதியின்  அருகாமையில் இருந்த வேலியின் ஒன்பது தூண்களையும், கடையின் சுவரையும் உடைத்து நொறுக்கி விட்டு கடைக்குள் புகுந்துள்ளது.

விபத்தினால் சேதமடைந்துள்ள கடையானது களுவாஞ்சிகுடி பகுதியைச் சேர்ந்த தனிநபருக்கு உரித்தான கொமியுனிகேஷனாகும்.

இங்கு போட்டோ பிரதி இயந்திரம், மின்மானி மற்றும்  கண்ணாடிகள் உட்பட ஆறு இலட்சத்து ஐம்பதினாயிரத்துக்கும் அதிகமான பெறுமதி வாய்ந்த பொருட்கள்  சேதமடைந்துள்ளதாக கடையின் உரிமையாளர் தெரிவிக்கிறார்.

மேலும்  வாகனத்தின்  முன்பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் கொமியுனிகேஷனுக்குள் புகுந்த வாகனத்தை மீட்டு பொலிஸ் நிலையத்தில் தரித்து வைத்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment