இந்த ஆண்டு இறுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படுவதுடன் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் மாகாணசபைகள் தேர்தலை நடத்த முடியும் என அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தேர்தலை தள்ளிப்போடும் எண்ணத்தில் ஒருபோதும் செயற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
தேர்தலை பிற்போடும் நோக்கத்தில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அரசாங்கதின் மீது குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில் இது குறித்து அமைச்சர் கயந்த கருணாதிலக மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

0 comments:
Post a Comment