அறுகம்பையில் விடுமுறையைக் கழிக்க வந்த, பிரித்தானிய இளம் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் போல் மெக்ளீன் என்ற 24 வயதான ஒருவரே பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
நண்பர்களுடன் அறுகம்பே பகுதிக்குச் சென்றிருந்த அவர், முதலைக் குன்று என அழைக்கப்படும் நீர்ப்பரப்பில் கைகழுவச் சென்றுள்ளார்.
இந்தநிலையில், அவரை முதலை இழுத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.
மெக்ளீனின் உடலைத் தேடும் நடவடிக்கைகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:
Post a Comment