கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் கடந்த மே மாதம் உணவுப் பாதுகாப்பு மாதமாகவும், கடந்த ஜூன் மாதம் 24 - 29 வரை ஒரு வார காலம் கைகழுவுதல் விழிப்புணர்வு வாரமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டு பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவினால் கல்முனை பிராந்தியத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத் பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர், உணவு மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதுரியா பானு ஆகியோர் இணைந்து பணிப்பாளரை பாராட்டி கௌரவித்தனர்.

0 comments:
Post a Comment