பிரதான செய்திகள்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாராட்டிக் கௌரவிப்பு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் கடந்த மே மாதம் உணவுப் பாதுகாப்பு மாதமாகவும், கடந்த ஜூன் மாதம் 24 - 29 வரை ஒரு வார காலம் கைகழுவுதல் விழிப்புணர்வு வாரமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டு பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவினால் கல்முனை பிராந்தியத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.


குறித்த வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கிய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் இன்று (08) பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.

பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத் பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர், உணவு மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பதுரியா பானு ஆகியோர் இணைந்து பணிப்பாளரை பாராட்டி கௌரவித்தனர்.


இந்நிகழ்வின்போது பிராந்திய பிரிவுத் தலைவர்கள், பணிமனையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment