பிரதான செய்திகள்

ஜெனரல் ஷவேந்திர சில்வா மீண்டும் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமனம்

ஜெனரல் ஷவேந்திர சில்வா மீண்டும் பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


ஜனாதிபதியின் ஒப்புதலின் பேரில் உரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படிஇ இந்த நியமனம் ஜூன் 1 முதல் டிசம்பர் 31இ 2024 வரை செல்லுபடியாகும்.


அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி முதல் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.


இராணுவத் தளபதியாகவும் பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும் கடமையாற்றிய ஷவேந்திர சில்வாஇ இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகியபோதுஇ ​​ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டார்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment