பிரதான செய்திகள்

மாமரம் மற்றும் பயிர் விதைகள் வழங்கும் நிகழ்வு

உலக உணவு பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் விவசாய திணைக்களத்தினால் மாமரம் மற்றும் பயிர் விதைகள் வழங்கும் நிகழ்வும் அது தொடர்பான விழிப்புனர்வு கருத்தரங்கும் இன்று (11) அட்டாளைச்சேனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் வளவாளராக அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் மாகாண விவசாய போதனாசிரியர் கலந்து சிறப்பித்தார். அத்துடன் அட்டாளைச்சேனை பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் மற்றும் ஏனைய திணைக்களங்களுக்கு பயிர் விதைகள், மாமரம் என்பன விவசாய போதனாசிரியரினால் வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சுற்றுச்சூழல் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அட்டாளைச்சேனை பிரதேச சபை உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்கள், ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment