சிறுவர்களின் சுகாதார மேம்பாட்டிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய…
துறைசார்ந்த உத்தியோகத்தர்களுக்கு "சேவை நலன்" பாராட்டு
கல்முனைப் பிராந்தியத்தில் அதிக போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை கண்காணித்து அவர்களின் சுகாதார மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் பாராட்டிப் பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
CERI சர்வதேச தொண்டு நிறுவனம் கல்முனைப் பிராந்தியத்தில் போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு உதவும் பொருட்டு பிராந்திய தாய்சேய் நலன்பிரிவுடன் இணைந்து கடந்த 06 மாதங்களாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தது.
கல்முனை பிராந்தியத்தில் உள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பொதுச் சுகாதார தாதிய உத்தியோகத்தர்கள், மேற்பார்வை பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், பொதுச்சுகாதார மருத்துவ மாதுக்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.
குறித்த உத்தியோகத்தர்களை பாராட்டிக் கௌரவிக்கும் பொருட்டு பிராந்திய தாய் சேய் நலன் பிரிவு ஏற்பாடு செய்த சேவை நலன் பாராட்டு விழா அண்மையில் இடம்பெற்றது. பிராந்திய தாய் சேய் நலன் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்பின் அவர்களினால் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்ட இந்நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சார்பாக கலந்துகொண்ட பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை, திருக்கோவில், இறக்காமம், பொத்துவில் ஆகிய பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளான டொக்டர் ஏ.எல்.இஸ்மாயில், டொக்டர் பீ.மோகனகாந்தன், டொக்டர் எப்.எம்.உவைஸ் மற்றும் CERI நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் உள்ளிட்ட அதன் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அட்டாளைச்சேனை, திருக்கோவில், இறக்காமம், பொத்துவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று போன்ற சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கடமையாற்றும் பொதுச் சுகாதார தாதிய உத்தியோகத்தர்கள், மேற்பார்வை பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், பொதுச்சுகாதார மருத்துவ மாதுக்கள் இதன்போது பாராட்டிப் பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
Ceri சர்வதேச தொண்டு நிறுவனம் போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் சுகாதார நலன்கருதி பல்வேறு கிளினிக் வசதிகள், போஷாக்கு உணவுப் பொதி வழங்குதல் மற்றும் உதவித் தொகை வழங்குதல் என கல்முனை பிராந்தியத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)



.jpg)
.jpg)
.jpg)
0 comments:
Post a Comment