பிரதான செய்திகள்

சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் ஏற்பாட்டில் மே தினக்கூட்டம்

(றியாஸ் ஆதம்)

சிலோன் ஜேர்னலிஸ்ட் போரம்  ஏற்பாடு செய்த மே தினக்கூட்டம் புதன்கிழமை (01) அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் இடம்பெற்றது. 


போரத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம்.ஜஃபர் (ஜே.பி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்சீல் பிரதம அதிதியாகவும், அக்கரைப்பற்று ஹல்வானி பேக்கரியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் தொழிலதிபருமான எஸ்.ஏ.எம்.சித்தீக் விசேட அதிதியாகவும் கலந்துகொண்டனர்.


அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் சகலருக்கும் தென்னை மற்றும் கற்றாளை மரங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றது.






 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment