பிரதான செய்திகள்

யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்க முடியாது; ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தீர்மானம்

யாழ்.கோட்டையை இராணுவத்திற்கு வழங்க முடியாது என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு திணைக்கப்பணிப்பாளருக்கு அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று (23)  இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இடம்பெற்ற தொல்லியல் திணைக்களம் தொடர்பான விடயத்திலேயே இவ் விடையம் எடுக்கப்பட்டள்ளது. இதன்போது மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்  யாழ். துரையப்பா விளையாட்டரங்கினை புனரமைப்பு செய்யும்போது விளையாட்டரங்கின் ஒருபகுதி யாழ். கோட்டையின் ஒரு பகுதியாக உள்ளமையால் அதனை புனரமைப்பு செய்ய விடாது பல்வேறு தடைகளை தொல்லியல் திணைக்களம் விதித்தது.

அவ்வாறான நிலையில் இராணுவத்தினர் எவ்வாறு அங்கு தங்குவதற்கு அனுமதி வழங்கியது. இதற்கான அனுமதி பெறப்பட்டதாகவும் தெரியவில்லை. எனவே இராணுவத்தினரை கோட்டைக்குள் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார். 

இதற்கு பதிலளித்த தொல்பொருள் திணைக்கள அதிகாரி, 2010 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்.கோட்டையின்  ராணி மாளிகையின் ஒரு பகுதியில் சுமார் 20 க்குட்பட்ட இராணுவத்தினர் தங்குவதற்கு ஏற்ற  சிறிய முகாம் காணப்பட்டது. தற்போது ராணி மாளிகை மீள் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

இதற்காக இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரிக்கையை விடுத்திருந்தோம். இதற்கு தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளருக்கு இராணுவத்தினர் தற்காலிக கொட்டகை அமைப்பதற்கு அனுமதி கேட்டிருந்தனர். இதற்கமைவாக பணிப்பாளரினால் 40x20 என்ற அளவில் தற்காலிக கொட்டகை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் இராணி மாளிகை புனரமைக்கப்பட்டு அதற்குள் நூதன சாலை அமைக்கப்படவுள்ளது. அதற்காகத் தான் அப்பகுதி புனரமைக்கப்படவுள்ளது.  புனரமைக்கப்பட்டதும் அங்கு ஒரு  நூதன சாலையும் அப்பகுதியலிருந்து ஆலயம் அமைக்கப்படவுள்ளது. அவ்வவாறு புனரமைக்ப்படும்போதும் மீண்டும் இராணுவத்தினருக்கு அது வழங்கப்படமாட்டாது.

இதேவேளை சிவாஜிலிங்கம் கோட்டைக்குள் இராணுவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவை ஏற்படின் தற்காலிக கொட்டகைக்குள்  அதற்கு பொலிஸார் காவல் கடமையில் ஈடுபடட்டும். புனரமைப்பு முடிந்ததும் பொலிஸார் வெளியேறவேண்டும். இராணுவத்தை இருக்க விட்டால் ஒட்டகத்திற்கு இடம் கொடுத்ததாக போய்விடும்.

இதன்போது வடமாகாண முதலமைச்சர் திணைக்களப் பணிப்பாளருக்கு குறித்த விடயத்தை எழுதுவதாக தெரிவித்ததுடன் கோட்டைக்குள் ஒட்டகம் என நகைச்சுவையாக பதிலளித்தார். குறித்தவிடயம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானமாக அனுப்பி வைப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment