விவசாய அமைச்சு தற்போது ராஜகிரியவில் அமைந்துள்ள நிலையில் அதன் பராமரிப்புச் செலவு அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு அமைச்சின் அலுவலகத்தை அமைப்பதற்காக 5 வருட குத்தகை அடிப்படையில் ராஜகிரியவில் கட்டடம் ஒன்று பெற்றுக்கொள்ளப்பட்டது.
குறித்த அலுவலகத்தின் முதல் மூன்று வருட வாடகைத் தொகையான 504 மில்லியன் ரூபாயை அரசாங்கம் ஏற்கனவே செலுத்தியிருந்தது. இந்நிலையில், அடுத்த இரண்டு வருடங்களுக்கான வாடகை வரி 15 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கட்டடத்துக்கான, ஐந்து வருடங்களுக்கான மொத்த வாடகைத் தொகை 960 மில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுவேளை, இதுத் தொடர்பில் கருத்து வெளியிட்ட விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, இவ்வாறான சொகுசு கட்டடம் ஒன்று விவசாய அமைச்சுக்கு அவசியமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஆகவே அமைச்சினை பழைய இடத்தில் மீளவும் அமைப்பதற்கு அனுமதி அளிக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம், அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் இந்த விடயத்தில் சபாநாயகர் தனித்து எவ்வித தீர்மானங்களையும் எடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 comments:
Post a Comment