கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சமூகவலைத்தளங்களில் எனக்கும், எனது குடும்பத்துக்கும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது. எனது பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கும் போது,
எனக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்குப் பின்னால், ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவரே இருக்கிறார். அவரின் முகநூலில் எனக்கு எதிரான பதிவுகளை காணமுடியும்.
மேலும் எனது கணவர் விடுதலை புலிகள் அமைப்போடு தொடர்பு வைத்திருந்ததாக சிலர் கூறுகின்றனர். அவ்வாறான எந்தவிதமான தொடர்புகளும் அவருக்கு இல்லை. இவ்வாறான போலியான பரப்புரைகளை செய்து பிரகீத் தொடர்பான விசாரணைகளை மூடிமறைக்கப் பார்க்கின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment