பிரதான செய்திகள்

தேசிய பூங்கா அமைக்கும் பொருட்டு செங்கலடி பிரதேசத்திற்கு அமைச்சர் ரவிந்திர சமரவீர விஜயம்

மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்திற்குட்பட்ட முந்தானைக் கட்டு ஆற்றுப் பகுதியில் உல்லாசப் பயணிகளின் வருகையினை கவரும் வகையில் தேசிய பூங்கா ஒன்றினை அமைக்கும் பொருட்டு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் ரவிந்திர சமரவீர நேற்று (29) குறித்த இடத்திற்கு விஜயம் செய்தார்.

இதன்போது அமைச்சர் குறித்த இடத்தினை பார்வையிட்டதுடன், அந்த இடம் தொடர்பாகவும் விலாவாரியாக ஆராய்ந்தார்.

மேற்படி இடத்தில் தேசிய பூங்கா ஒன்றினை அமைப்பதனூடாக உல்லாசப் பயணிகளின் வருகையினை அதிகரிக்க முடியும் எனவும், அதனூடாக அதிக வருமானத்தையும் ஈட்ட முடியும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளருமான எம்.எஸ்.சுபையிர், ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் நாகமனி கதிரவேல்,  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் லலிந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.




 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment