பிரதான செய்திகள்

மருதமுனை நூலக வாசகர் வட்ட பிரதிநிதிகளுடன் முதல்வர் றக்கீப் கலந்துரையாடல்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

மருதமுனை பொது நூலக வாசகர் வட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களை கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது நூலக அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டதுடன் வாசகர்களின் தேவைகள் குறித்தும் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, ஆசியா பௌண்டேஷன் நிபுணத்துவ ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத், நூலகர் ரிஹானா ஹாலித் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

அதேவேளை நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் 16 மில்லியன் ரூபா நிதி மூலம் நூலக மேல் மாடியில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள சமூக வள நிலையத்தை பார்வையிட்ட முதல்வர் அதனை மக்கள் பாவனைக்கு கையளிப்பது தொடர்பிலும் ஆராய்ந்துள்ளார்.

அத்துடன் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் 30 மில்லியன் ரூபா நிதியில் நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற கேட்போர் கூட நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும் ஆணையாளர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் கலந்துரையாடியுள்ளதுடன் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment