பிரதான செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கு புதிதாக தெரிவான உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

(இஸ்ஸடீன்)

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற மற்றும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்று (2) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா முன்னிலையிலே புதிய உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு ஏறாவூர் நகர சபை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், ஸ்ரீ.ல.சு.கட்சி மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபையிரின் அழைப்பின் பேரிலே புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு மாநகர சபை, ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை, வாழைச்சேனை பிரதேச சபை போன்றவற்றிக்கு தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களே இதன்போது சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்நிகழ்வில், ஏறாவூர் நகர சபையின் செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில், ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளத்தின் தலைவர் மௌலவி எம்.ஏ.அப்துல் வாஜித், ஏறாவூர் ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் மௌலவி நிராஸ், ஸ்ரீ.ல.சு.கட்சி ஏறாவூர் மத்திய குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.








 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment