பிரதான செய்திகள்

எதிர்வரும் காலங்களில் அதிரடி அரசியலில் ஈடுபடுவேன்: பிரதேச சபை உறுப்பினர் றியா மசூர்

எதிர்வரும் காலங்களில் அதிரடி அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும், மக்கள் வழங்கிய அமானிதத்தை பாதுகாத்து என்றும் இப்பிரதேச மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தயாராகவுள்ளதாகவும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் றியா மசூர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் விசேட அமர்வு நேற்று (24) தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தலைமையில் சபையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது தனது கன்னி உரையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலில் ஈடுபட்டேன். மக்களது எதிர்பார்ப்புக்கள் வீன்போகாத வகையில் அவர்கள் வழங்கிய ஆணையை மதித்து சேவை செய்வதற்கும் ஆயத்தமாகவுள்ளேன்

அரசியலுக்குள் குத்துவெட்டுக்கள் உண்டு என்பதனை கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அதனை இப்போது நேரடியாகவும் பார்த்துள்ளேன். எது எவ்வாறாயினும் மக்கள் வழங்கிய அமானிதத்தை பாதுகாத்து அவர்களுக்கு பணியாற்றுவதற்கு கடமைப்பட்டுள்ளேன்.

எதிர்வரும் காலங்களில் அதிரடி அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் பிரதேச சபை உறுப்பினர் றியா மசூர் மேலும் தெரிவித்தார்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment