பிரதான செய்திகள்

வாழைச்சேனை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வசமானது

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கைப்பற்றியுள்ளது.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் முதலாவது அமர்வு உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை. சலீம் தலைமையில் இன்று (6) இடம்பெற்றது.

 சபையின் தவிசாளரக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த திருமதி என். ஸாபா ஜெயரஞ்சித், உப தவிசாளராக ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியைச் சேர்ந்த தர்மலிங்கம் யசோதரன் ஆகியயோர் தெரிவு செய்யப்பட்டனர்

உப தவிசாளர் தெரிவின் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சினை சேர்ந்த தர்மலிங்கம் யசோதரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கனகரெட்ணம் கமலநேசன் ஆகியோரது பெயர் முன்மொழியப்பட்டது.

இதன்போது ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் தர்மலிங்கம் யசோதரன் 12 வாக்குகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கணகரெட்ணம் கமலநேசன் 9வாக்குகளையும் பெற்றனர்.


 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment