அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2வது அமர்வு செவ்வாய்க்கிழமை (10) தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா தலைமையில் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது தலைமை உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல கிராமங்களைக் கொண்டடைந்த அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முஸ்லிம், தமிழ், சிங்கள சமூகங்கள் மிக நீண்டகாலமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்களின் இன நல்லுறவுக்காகவும், மக்களின் அன்றாடப் பிரச்சினைகள், உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் புதிதாக அமையப் பெற்றுள்ள இச்சபை கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும். இப்பிரதேச சபை, நாட்டின் அனைத்து மக்களுக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் முன்மாதரியாகத் திகழ வேண்டும்.
பிரதேச மட்டத்தில் மக்கள் அன்றாடம் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அவ்வாறான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கி, உடனுக்குடன் தீர்வு வழங்குவதற்கு அரசியல் பிரதிநிதிகளுக்கு, அதிகாரிகள் பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டும். எமக்குக் கிடைத்துள்ள அரசியல் அதிகாரத்தை மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தும் போதே மக்கள் எம்மை மதித்து நடப்பதுடன், எதிர்காலத்திலும் நம்பிக்கை வைத்து நமக்கான ஆணையை வழங்குவார்கள்.
இந்தப் பிரதேச சபையை மக்கள் சபையாகவே நான் கருதுகின்றேன். மக்களின் நலனுக்காகவும், பிரதேசங்களின் அபிவிருத்திக்காகவும் எந்த நேரமும், எச்சந்தர்ப்பத்திலும் இச்சபை இயங்கிக் கொண்டிருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment