பிரதான செய்திகள்

ரணிலை வீழ்த்த ரத்ணதேரா் தலைமையில் முக்கிய சந்திப்பு...?

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தலைமையில் முக்கியமான சந்திப்பொன்று நேற்று இரவு நடந்துள்ளது. இந்த சந்திப்பிற்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவும் கலந்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த பிரேரணை சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டு எதிர்வரும் 4ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இரவு 9.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தவும் ஏற்பாடாகியுள்ளது. 

இந்நிலையிலேயே,  பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரலியே ரத்ன தேரர், விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோருக்கு இடையில் முக்கியமான சந்திப்பு நேற்று நடந்துள்ளது.

இந்த சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில் பிரேரணை தொடர்பில் தீர்மானமிக்க முடிவுகள் எடுத்திருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment