பிரதான செய்திகள்

உங்கள் தந்தையை விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன் - ஆனந்தசுதாகாின் பிள்ளைகளிடம் ஜனாதிபதி வாக்குறுதி

பத்து வருடங்களாக சிறையில் வாடிவரும் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

கொழும்பிற்கு வந்துள்ள ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதியை நேரில் சந்தித்தனர். இதன்போதே இந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் கடந்த சனிக்கிழமை கொழும்பில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே-யை சந்தித்து, தாயை இழந்து தவிக்கும் தமக்கு தந்தையுடனேனும் இணைந்து வாழ நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

குழந்தைகளின் கோரிக்கையை ஏற்ற ஆளுநர், இது குறித்து ஜனாதிபதியிடம் கலந்துரையாடுவதாகவும், ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார்.

அதற்கமைய ஜனாதிபதியுடனான சந்திப்பு இன்று இடம்பெற்றிருந்ததுடன், நம்பிக்கையான வாக்குறுதியும் ஜனாதிபதியிடமிருந்து கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment