வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட மற்றும் நிமிக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனி கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்திலுள்ள 32 சபைகளுக்கான முதல் அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி வரை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் பத்திரிகை விளம்பரம் என்பன ஓரிரு தினங்களில் வெளிடப்படவுள்ளன.
அதற்கமைவாக 27ஆம் திகதி காலை 9.30மணிக்கு சம்மாந்துறை பிரதேச சபைக்கான அமர்வும், காலை 11.30மணிக்கு காரைதீவு பிரதேச சபைக்கான அமர்வும் மாலை 3மணிக்கு நிந்தவூர் பிரதேச சபைக்கான அமர்வும் நடைபெறவுள்ளது.
28ஆம் திகதி அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு மற்றும் இறக்காமம் பிரதேச சபைக்கான முதல் அமர்வுகள் நடைபெறவுள்ளது. 29ஆம் திகதி திருக்கோவில் பொத்துவில் மற்றும் லாகுகல பிரதேச சபைக்கான முதல் அமர்வுகள் நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 2ஆம் திகதி கல்முனை மாநகர சபைக்கான முதல்அமர்வும், நாவிதன்வெளி பிரதேச சபைக்கான முதல் அமர்வும் நடைபெறும். மீதி பெரும்பான்மையின சபைகளுக்கான முதல் அமர்வுகள் ஏப்ரல் 16ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.

0 comments:
Post a Comment