பிரதான செய்திகள்

கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்ற முதல் அமர்வுகளுக்கான திகதி அறிவிப்பு

கிழக்கு மாகாணத்திலுள்ள 45 உள்ளுராட்சி சபைகளில் அறுதிப்பெரும்பான்மை இல்லாத 32 சபைகளுக்கான முதல் அமர்வுகளுக்குரிய திகதிகளை கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் அறிவித்துள்ளார்.

வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட மற்றும் நிமிக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனி கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்திலுள்ள 32 சபைகளுக்கான முதல் அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி வரை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் பத்திரிகை விளம்பரம் என்பன ஓரிரு தினங்களில் வெளிடப்படவுள்ளன.

அதற்கமைவாக 27ஆம் திகதி காலை 9.30மணிக்கு சம்மாந்துறை பிரதேச சபைக்கான அமர்வும், காலை 11.30மணிக்கு காரைதீவு பிரதேச சபைக்கான அமர்வும் மாலை 3மணிக்கு நிந்தவூர் பிரதேச சபைக்கான  அமர்வும் நடைபெறவுள்ளது.

28ஆம் திகதி அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு மற்றும் இறக்காமம் பிரதேச சபைக்கான முதல் அமர்வுகள் நடைபெறவுள்ளது. 29ஆம் திகதி திருக்கோவில் பொத்துவில் மற்றும் லாகுகல பிரதேச சபைக்கான முதல் அமர்வுகள் நடைபெறவுள்ளது.

ஏப்ரல் 2ஆம் திகதி கல்முனை மாநகர சபைக்கான முதல்அமர்வும், நாவிதன்வெளி பிரதேச சபைக்கான முதல் அமர்வும் நடைபெறும். மீதி பெரும்பான்மையின சபைகளுக்கான முதல் அமர்வுகள் ஏப்ரல் 16ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment