பிரதான செய்திகள்

ஓட்டமாவடி ஹிஜ்றாவில் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் ஆரம்ப ஊட்டல் பாடசாலையாக இருக்கின்ற ஹிஜ்றா வித்தியாலயத்தில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று (20) பாடசாலையின் அதிபர் ஜனாபா செய்னம்பு ஹமீட் தலைமையில் இடம் பெற்றது.

ஆரம்ப பிரிவு மாணவர்களை எதிர் காலத்தில் சிறந்த தலைமைத்துவ பன்புள்ளவர்களாக உருவாக்கும் தூர நோக்கு சிந்தனையுடன் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவி கல்வி பணிப்பாளர் அஹ்சாப் கலந்து கொண்டு மாணவ தலைவர்களுக்கான சின்னங்களை உத்தியோக பூர்வமாக அணிவித்ததுடன் மாணவ தலைவர்களின் சத்திய பிரமாணமும் இடம் பெற்றது.




 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment