பிரதான செய்திகள்

மொரகஹமுல்ல முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான மொத்த வியாபார நிலையத்திற்கு தீ வைப்பு..! விசேட அதிரப்படை களத்தில்


மெதமஹனுவர மொரகஹமுல்ல  பகுதியில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான மொத்த வியாபார நிலையம் தீப்பற்றி எரிவதாக அங்கிருந்து கிடைக்கும் முதல்கட்ட தகவல்கள்  தெரிவிக்கின்றன.

திகன பிரதேசத்திற்கு பொலிஸ் விஷேட அதிரடிப்படை பாதுகாப்பிற்காக அழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் முஜீபுர் ரஹ்மான் மற்றும் எஸ் எம் மரிக்கார் ஆகியோர் குறிப்பிட்டனர்.

தற்போது திகன பிரதேசத்தின் அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்பில் முன்னெடுக்கபட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் வினவிய போதே அவர்கள்  குறிப்பிட்டனர்.

சற்றுமுன்னர் பொலிஸ் மா அதிபர் விஷேட அதிரடிப்படை  பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் இருவரும் கதைத்ததாக கூறிய அவர் தேவையேற்பட்டால் ராணுவத்தை களமிறக்க நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment