பிரதான செய்திகள்

"செயற்பட்டு மகிழ்வோம்" சிறுவர் விளையாட்டு போட்டி

இலங்கை கல்வி பாடத்திட்டத்திற்கு அமைவாக தரம் 03 மாணவர்களுக்கு "செயற்பட்டு மகிழ்வோம்" செயற்பாடு ஊடாக மெய்வள்ளுனர் விளையாட்டு போட்டி கண்டி போகம்பர உள்ளக விளையாட்டு அரங்கில்  நடைபெற்றது.

இவ் விளையாட்டு போட்டியில்  09 மாகாணங்களை சேர்ந்த 162 பாடசாலைகளின் 1458 மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கும் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.

இதன் போது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கி வைக்கபட்டன. இந் நிகழ்வில்  கல்வி அமைச்சின் விளையாட்டு பிரிவிற்கு பொறுப்பான உயர் அதிகாரிகள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் எனப் பலர் கலந்துக்கொண்டனர்.


 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment