பிரதான செய்திகள்

ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி பொது செயலாளர் இலங்கை விஜயம்

ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி பொது செயலாளர் ஜெஃப்ரி ஃபெல்ட்மன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இம்மாதம் 9 ஆம் திகதி முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் இவர் இலங்கையில் தங்கி இருப்பார் என ஐ.நா சபையின் செயலாளர் நாயகத்தின் ஊடக பேச்சாளர் ஸ்டெபான் துஜாரிக் இதனை அறிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் அவர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் என்பவற்றின் பிரதிநிதிகளையும், மதத்தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.

அத்துடன் இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்தும் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெஃப்ரி ஃபெல்ட்மன் கண்டிக்கு சென்று பார்வையிட உள்ளதுடன் அங்குள்ள மத தலைவர்களுடனும் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக ஸ்டெபான் துஜாரிக் தெரிவித்துள்ளார்.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment