பிரதான செய்திகள்

மருதமுனை ஹாரிஸ் கல்முனை மாநகர சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஹெலிகொப்டர் சின்னத்தில் 03ஆம் இலக்க   சுயேச்சைக்குழுவின் 05 ஆம் வட்டார வேட்பாளராக போட்டியிட்டு வெற்றியீட்டிய மருதமுனை எம்.எஸ்.எம்.ஹாரிஸ் (நவாஸ்) இன்று புதன்கிழமை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி முன்னிலையில் மாநகர சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

மாநகர சபை செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையின் கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப் ஆகியோரும் புதிய உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஹாரிஸின் உறவினர்களும் முக்கியஸ்தர்கள் சிலரும் பங்கேற்றிருந்தனர்.

 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment