பிரதான செய்திகள்

நீர்கொழும்பு மாநகர சபையின் மேயராக தயான் லன்சா தெரிவு

நீர்கொழும்பு மேயராக  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் வர்ணகுல மோஸஸ் தயான் லன்ஸாவும்  பிரதி மேயராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த  எம்.ஏ.இசெட்.பரீஸ் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

 இன்று வெள்ளிக்கிழமை (23) காலை நடைபெற்ற வாக்கெடுப்பிலேயே, மேற்படி இருவரும்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வாக்கெடுப்பானது, மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சந்ராணி சமரகோன் தலைமையில்,  நீர்கொழும்பு மாநகர சபையின் கூட்ட மண்டபத்தில், இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நீர்கொழும்பு மாநகர சபைக்காக புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்  இதில் பங்குபற்றினர்.

மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளுக்கான வாக்கெடுப்பை மேல் மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் நடத்தினார்.

இரண்டு பதவிகளுக்கான வாக்கெடுப்புகளும் பகிரங்க வாக்கெடுப்பாக நடத்துவதற்கு  தீர்மானிக்கப்பட்டு, வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.

வாக்களிப்பின்போது ஸ்ரீ  லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த வர்ணகுல மோஸஸ் தயான் லன்ஸா, 25 வாக்குகளைப்பெற்று மேயராக தெரிவு செய்யப்பட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த  ரொயிஸ் பெர்னாந்துவுக்கு 19 வாக்குகளே கிடைத்தன.
 photo mujalast_zpscvpregm5.gif
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
 photo mujalast_zpscvpregm5.gif எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments:

Post a Comment